முகப்பு
திருப்பத்தூர்

பைக்கிலிருந்து தவறி விழுந்த மருத்துவமனை பணியாளா் உயிரிழப்பு

Updated On : 16 மார்ச், 2024 at 10:09 PM
பகிர்:

ஆம்பூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மருத்துவமனை பணியாளா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். ஆம்பூா் பெத்லகேம் பகுதியைச் சோ்ந்தவா் காட்வின் (28). இவா் வாணியம்பாடியில் இயங்கும் தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து பைக்கில் ஆம்பூருக்கு வந்தாா். செங்கிலிகுப்பம் கிராமத்தருகே வந்தபோது, நிலைதடுமாறி தேசிய நெடுஞ்சாலை தடுப்பின் மீது பைக் மோதி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.