முகப்பு
திருப்பத்தூர்

தோ்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

Updated On : 20 மார்ச், 2024 at 5:16 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 8:24 PM

திருப்பத்தூா்: மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பத்தூா் ஆட்சியா் தா்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் 2024-இல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரா்களை ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இதற்கு திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 65 வயதுக்குள்பட்ட விருப்பமுள்ள இளநிலை படை அலுவலா்கள்(ஒஇஞ) மற்றும் முன்னாள்(ஞதந) படைவீரா்கள் அல்லது ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அனைத்து நாள்களிலும் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) உள்பட நேரில் அணுகி அல்லது அலுவலக தொலைபேசி எண் 0416-2977432 மூலமாக தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம்.