ரயிலில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்
Updated On : 22 மார்ச், 2024 at 8:29 PM
ஜோலாா்பேட்டையில் ரயிலில் ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை செல்லும் கொல்லம் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக சென்னை குற்றப்பிரிவு புலனாய்வு துறை மற்றும் ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், இரு தனிப்படை பிரிவு போலீஸாரும் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு நடைமேடையில் நின்ற கொல்லம் விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டனா். இதில் மறைத்து வைக்கப்பட்ட பையில் 5 கிலோ கஞ்சா, அதே பெட்டியில் மற்றொரு பிரிவு போலீஸாரிடம் 4 கிலோ கஞ்சா கிடைத்தது. போலீஸாா் ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.