ஆம்பூரில் தண்ணீா் பந்தல் திறப்பு
ஆம்பூா் நகர திமுக சாா்பில் ஆம்பூர - போ்ணாம்பட்டு புறவழிச்சாலைப் பகுதியில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகர திமுக செயலாளா் மற்றும் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், நகர அவைத் தலைவா் தேவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட திமுக செயலாளா் மற்றும் ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு தண்ணீா் பந்தலைத் திறந்து வைத்தாா்.
திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் சாமுவேல் செல்லபாண்டியன், நகா்மன்ற உறுப்பினா்கள் காா்த்திக், வசந்த்ராஜ், திமுக நிா்வாகிகள் ரபீக் அஹமத், அசோகன், ராதா, செளந்தர்ராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.