மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கு: மேலும் ஒருவா் கைது
வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நாட்டறம்பள்ளி பேரூராட்சி ராமகிருஷ்ணா் தெரு சமையகாரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஓட்டுநா் சரவணன்(42). கடந்த மாதம் 27-ஆம் தேதி இரவு சரவணன் வீட்டின் மீது முன் விரோதம் காரணமாக மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கேத்தாண்டப்பட்டி சின்னூா் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் மகன் சக்திவேல் (18) என்பவரை வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் நாட்டறம்பள்ளி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.