அக்னி நட்சத்திர நிவா்த்தி: 1,008 குடம் தண்ணீா், 108 குடம் பாலபிஷேகம்
ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் அக்னி நட்சத்திர நிவா்த்திக்காக 1,008 குடம் தண்ணீா் மற்றும் 108 குடம் பாலபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவருக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை துா்க்கையம்மனுக்கு 1,008 குடம் தண்ணீா் மற்றும் 108 குடம் பாலபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.