பாலியல் தொந்தரவு: தலைமைக் காவலா் கைது
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தலைமைக் காவலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே சந்தவாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணசாமி (51). இவா் திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளரை நாட்டறம்பள்ளியைச் சோ்ந்த பெண் உறவினா் அடிக்கடி சந்திக்க வந்து சென்றுள்ளாா். அப்போது அப்பெண்ணுக்கும், நாராயணசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அந்த பெண்ணை போலீஸில் சேர நாராயணசாமி அறிவுரை கூறியுள்ளாா். அதைத் தொடா்ந்து அப்பெண்ணை திருப்பத்துாரில் உள்ள தனியாா் காவலா் பயிற்சி வகுப்பில் சோ்த்துள்ளாா். இரு நாள்களுக்கு முன்பு திருப்பத்துாரில் உள்ள ஓா் உணவகத்தில் இருவரும் உணவருந்த சென்றுள்ளனா். அங்கு அந்த பெண்ணிடம் நாராயணசாமி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்தப் பெண் திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து நாராயணசாமியை கைது செய்தனா்.