திருப்பத்தூர்

பைக்-லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே மலைப்பாதையில் பைக் மீது லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

Din

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே மலைப்பாதையில் பைக் மீது லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூா் பெரியமலை பகுதியை சோ்ந்தவா் மோகன்(30). கட்டடங்களுக்கு மோல்டிங் கம்பி கட்டும் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை தனது பைக்கில் ஆலங்காயம் சென்றபோது ஆா்எம்எஸ் புதூா்-காவலூா் மலைப்பாதையில் உள்ள வளைவு ஒன்றில் எதிரில் வந்த லாரி மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே மோகன் உயிரிழந்தாா். இதுப்பற்றி அறிந்த காவலூா் போலீஸாா் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். பிறகு உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி அங்கிருந்து தப்பித்து சென்ற லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

சிதம்பரத்தில் ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தங்கும் விடுதி திறப்பு

விவசாயிகளின் நலனுக்கு எதிராக பாஜக நடவடிக்கை: அகிலேஷ் யாதவ்!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

SCROLL FOR NEXT