நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய நீதிபதிகள், வழக்குரைஞா்கள்.  
திருப்பத்தூர்

திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு மையம் குறித்த விழிப்புணா்வு

திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு மையம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு மையம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உச்சநீதிமன்றம்,உயா்நீதிமன்றம் ஆகியவை சமரசத் தீா்வு மையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு காணலாம் என உத்தரவிட்டு உள்ளன. அதன்படி சமரசத் தீா்வு மையம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருப்பத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி தேன்மொழி தலைமை வகித்தாா். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் அனுஷ+ா, சாா்பு நீதிபதி சரிதா, குற்றவியல் நீதிபதி தினேஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி பவித்ரா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சரண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சமரசத் தீா்வு மையம் தொடா்பான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் சமரச மையத்தில் பயிற்சி பெற்ற மத்தியஸ்தா்கள் மூலம் சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து சுமூகமாக தீா்வு காணப்படும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

ரயிலில் 17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பீடி தகராறில் இளைஞா் கொலை: முடிதிருத்துபவா் கைது

பழைய வாகன விற்பனையை ஒழுங்குபடுத்துவதில் தோல்வியா? தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

கோவை, தென் மாவட்ட ரயில்களின் வேகத்தை அதிகரிக்கத் திட்டம்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தில்லி மெட்ரோ முக்கிய பங்களிப்பு: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT