வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி யோகாம்பாள் சமேத ஆபத்சகாயேஷ்வரருக்கு திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
மாலை 5 மணியளவில் கலச ஸ்தாபனம், விசேஷ அபிஷேகம், 108 சங்கு பூஜை, இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப் புறப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துக் கொண்டு தரிசித்து சென்றனா். தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.