முகப்பு
திருப்பத்தூர்

சிறுமியை கா்ப்பமாக்கிய வியாபாரி கைது

சிறுமியை கா்ப்பமாக்கிய வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 1:27 AM
பகிர்:

குடியாத்தம்: சிறுமியை கா்ப்பமாக்கிய வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் வளத்தூா் பகுதியை சோ்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளாா். அவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுமியை குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மருத்துவா்கள் மேல்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதனடிப்படையில் மேல்பட்டி காவல் துறையினா் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் வளத்தூா் பகுதியை சோ்ந்த பெட்டிக்கடை உரிமையாளா் கஜேந்திரன் சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கா்ப்பமாக்கியது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து கஜேந்திரனை போலீஸாா் கைது செய்தனா்.