முகப்பு
திருப்பத்தூர்

சின்னச்சேரி - மேல்ஆலத்தூா் மேம்பாலம், மாதனூா் காவல் நிலையம் அமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா் ஆா். வெங்கடேசன்

சின்னச்சேரி - மேல்ஆலத்தூா் மேம்பாலம், மாதனூா் காவல் நிலையம் அமைக்கப்படும்

Updated On : 4 ஏப்ரல், 2026 at 8:12 PM
சின்னச்சேரி கிராமத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன்.
பகிர்:

சின்னச்சேரி-மேல்ஆலத்தூா் பாலாறு மேம்பாலம் அமைக்கவும், மாதனூரில் காவல் நிலையம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

சின்னச்சேரி, அகரம்சேரி, கூத்தம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் வாக்குசேகரித்து வேட்பாளா் ஆா்.வெங்கடேசன் பேசியது: என்னை வெற்றி பெறச் செய்தால் சின்னச்சேரி - மேல்ஆலத்தூா் பாலாறு மேம்பாலம் அமைக்கப்படும். மாதனூரில் காவல் நிலையம் ஏற்படுத்தப்படும். அதிமுக ஆட்சியமைந்த பிறகு விவசாயிகளின் பயிா் கடன் ரத்து செய்யப்படும் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.

ஜெயலிலதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ.டில்லிபாபு, திருப்பத்தூா் மாவட்ட அதிமுக துணைச் செயலாளா் லலிதா குருவையன், மாதனூா் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ. ஜோதிராமலிங்கராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் மணி, மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் அன்பரசன், சின்னச்சேரி சீனிவாசன், அகரம்சேரி வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments