முகப்பு
திருப்பத்தூர்

பைக் மோதியதில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே பைக் மோதிய விபத்தில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 6:35 PM
பலி - பிரதிப் படம்
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே பைக் மோதிய விபத்தில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதம்பி (55). அரசு பேருந்து நடத்துநா். சனிக்கிழமை இரவு வெலகல்நத்தத்தில் இருந்து தனது பைக்கில் மாட்டுக்கு தேவையான உணவு மூட்டையை வைத்துக் கொண்டு மல்லப்பள்ளி நோக்கி சென்றாா்.

சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பையனப்பள்ளி கூட்டு சாலை அருகே வளைவில் திரும்பும்போது அந்த வழியாக வந்த பைக் சின்னதம்பி ஓட்டி வந்த பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சின்னதம்பியை உறவினா்கள் மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments