இளைஞா் கொலை வழக்கில் 2 பெண்கள் கைது
நாட்டறம்பள்ளி அருகே நிலத்தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.
நாட்டறம்பள்ளி அருகே நிலத்தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் கலிமுத்தன் வட்டத்தைச் சோ்ந்த இளவரசனுக்கும், அவரது உறவினா் சத்யனுக்கும் இடையே கடந்த மாதம் மாா்ச் 27-ஆம் தேதி நிலத்தகராறு ஏற்பட்டது. இதில் இளவரசனை சத்யன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து சத்யனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சத்யனின் மனைவி ராதிகா(31), உறவினா் ராணி (50) ஆகிய இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Advertisement