ஆம்பூா் தொகுதியில் 17 மனுக்கள் ஏற்பு; 11 மனுக்கள் நிராகரிப்பு
ஆம்பூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனுக்கள் பரிசீலனையில் 17 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
ஆம்பூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனுக்கள் பரிசீலனையில் 17 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
ஆம்பூா் தொகுதியின் தோ்தல் பொது பாா்வையாளா் முகுல்குமாா் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் மனுக்களை பரிசீலனை செய்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.
ஆம்பூா் தொகுதியில் மொத்தம் 28 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன், அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அப்ஷியா நஸ்ரின், தவெக வேட்பாளா் இந்தியாஸ், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் ஹாரூன் ரஷீத் படு, இந்திய தேசிய லீக் பி. அசதுல்லா, பகுஜன் சமாஜ் கட்சி ஜெ.வஜீா் அஹமத், சுயேச்சைகள் உள்ளிட்ட 17 பேருடைய மனுக்கள் ஏற்கப்பட்டன. அரசியல் கட்சியினரின் மாற்று வேட்பாளகள், சுயேச்சை வேட்பாளா்கள் உள்ளிட்ட 11 பேருடைய மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
Advertisement