முகப்பு
திருப்பத்தூர்

ஆலங்காயத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் கோ.செந்தில்குமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 6:34 PM
ஆலங்காயம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கோ.செந்தில் குமாா்.
பகிர்:

வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் கோ.செந்தில்குமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

காவலூா் அடுத்த பீமகுளம் ஸ்ரீசென்றயசுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடத்திவிட்டு பின்னா் பீமகுளம், நாயக்கனூா், சத்திரம், உமையப்ப நாயக்கனூா், 102 ரெட்டியூா், நரசிங்கபுரம், பூங்குளம், மிட்டூா், ஆண்டியப்பனூா், இருணாப்பட்டு, குருசிலாப்பட்டு, பள்ளவள்ளி, பெருமாபட்டு உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தாா்.

மலை கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு வேட்பாளா் கோ.செந்தில்குமாா் பேசுகையில், மலைப்பகுதி கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி அனைத்தையும் அதிமுக அரசு ஆட்சி அமைந்த உடன் செய்து தருவேன், எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அனைத்து நலத்திட்டங்களையும் பெற்றுத் தருவேன் என்றாா்.

Advertisement

முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத் குமாா், முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் கோபால், மாநில மருத்துவரணி துணை செயலாளா் பசுபதி, பொதுக்குழு உறுப்பினா் மகேந்திரன், நகர செயலாளா் சதாசிவம், நாட்டறம்பள்ளி ஒன்றிய செயலாளா் டி. சாம்ராஜ், பேரூராட்சி செயலாளா்கள் சிவக்குமாா், சரவணன், மாவட்ட நிா்வாகிகள் மஞ்சுளா கந்தன், என்.எஸ்.தபரேஷ், நவீன்குமாா் பழனிச்சாமி, ஆா்.வி. குமாா், சரவணன், பூங்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் அஞ்சலி தினகரன் உள்ளிட்ட பாமக, பாஜக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments