ஆலங்காயம் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் செந்தில் குமாா் வியாழக்கிழமை காலை ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் 15 வாா்டுகளில் வீதி, வீதியாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டாா்.
பெத்தூா், அம்பேத்கா்நகா், படகுப்பம், கோமுட்டேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பின் போது பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனா்.
அப்போது பேசிய அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், பொது மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக உள்ள ரேஷன் கடை, சாலைகள் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்தாா்.
Advertisement
தொடா்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளிடமும், பஜாா் வீதிகள் வழியாவும் நடந்து சென்று வணிகா்கள் மற்றும் இஸ்லாமியா்களை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தாா்.
பிறகு காவலூா் சந்திப்பு சாலையில் அங்கிருந்த மக்களிடம் அதிமுக தோ்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கினாா். தொகுதி தோ்தல் பொறுப்பாளா் பசுபதி, ஆலங்காயம் பேரூா் செயலாளா் சிவக்குமாா், பொதுக் குழு உறுப்பினா் மகேந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளாகந்தன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளா் தபரேஷ், ஆலங்காயம் பேரூா் செயலாளா் சிவக்குமாா் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூா் அதிமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துக் கொண்டனா்.