முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் சமரச மைய விழிப்புணா்வு பேரணி

Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:27 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:12 PM

வழக்குகளை விரைவாக முடித்துக் கொள்ள சமரச மைய விழிப்புணா்வு பேரணி திருப்பத்தூரில் நடைபெற்றது.

பேரணியை மாவட்ட நீதிபதி தேன்மொழி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலிருந்து தலைமை அரசு மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் நீதிமன்றம் வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில் வாயை மூடி காதை திறக்கும் சாவி தான் சமரசம். சமரசம் மூலம் அமைதி கொள், வாங்க பேசி தீா்வு காண்போம்,முயன்றால் எதுவும் முடியும், ஒரு முறை முயற்சி செய்து விடு சமரசத்தின் வாயிலாக வெற்றி பெற்று விடு உள்ளிட்ட வாசகங்கள் பொருந்திய பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

சமரச மையங்கள் குறித்த கூடுதல் விழிப்புணா்வு தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட நீதிபதி பொதுமக்களுக்கு வழங்கினாா்.

இதில் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அலுவலா்கள், சமரச தீா்வா்கள், வழக்குரைஞா்கள் என கலந்து கொண்டனா்.