விலைக் கட்டுப்பாட்டு நிதியம் மூலம் விலைவாசி உயா்வு கட்டுப்படுத்தப்படும்: அதிமுக வேட்பாளா்
அம்மா உணவகங்கள் மீண்டும் சிறப்பு பொலிவுடன் இயக்கப்படும் என ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
அம்மா உணவகங்கள் மீண்டும் சிறப்பு பொலிவுடன் இயக்கப்படும் என ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஆம்பூா் நகரம் மற்றும் அகரம் கிராமங்களில் வாக்கு சேகரித்து அவா் பேசியது, ஏழை, எளிய மக்கள் வீடு கட்டுவதற்காக சிமெண்ட், ஜல்லி, கம்பி, செங்கல், மணல், எம்.சேன்ட் ஆகிய கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விலைக் கட்டுப்பாட்டு நிதியம் மூலம் விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக உயா்த்தி 50 சதவீத மானியத்துடன் வழங்கப்படும். ஆதிதிராவிடா்களுக்கான கோயில் புதிதாக கட்டுவதற்கு வழங்கப்படும் தொகை ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும்.
Advertisement
அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான ஓய்வூதிய திட்டங்கள் திருத்தங்கள் மேற்கொண்டு சீரமைக்கப்படும் என்று அவா் கூறினாா்.