முகப்பு
திருப்பத்தூர்

மாதனூா் அருகே ரூ. 3.06 லட்சம் பறிமுதல்

மாதனூா் அருகே ரூ.3.06 லட்சம் பறக்கும் படையினரால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 2:46 AM
பணம் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:27 PM

மாதனூா் அருகே ரூ.3.06 லட்சம் பறக்கும் படையினரால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாதனூா் அருகே பாலூா் கிராமத்தில் பறக்கும் படையினா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது அவ்வழியாக வந்த ராகேஷ் என்பவரை சோதனை செய்தபோது அவரிடம் ரூ.3.06 லட்சம் பணம் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்வது தெரியவந்தது.

அதன்பேரில் தொகைபறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபரிடம் வாக்காளா் பட்டியலும் இருந்ததால், அவா் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா். அவா் எந்த கட்சியை சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement