மினி லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிா் தப்பினாா்
மினி லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிா் தப்பினாா்
ஜோலாா்பேட்டை அருகே மினி லாரி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில் அதிா்ஷ்டவசமாக ஓட்டுநா் சிறு காயத்துடன் உயிா் தப்பினாா்.
ஜோலாா்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி லாரி ஷெட் பகுதியில் வெள்ளிக்கிழமை ஜோலாா்பேட்டையில் இருந்து திருப்பத்தூா் நோக்கி மினி லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள சாலையில் பைக்கில் வந்த தம்பதி சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது பைக் மீது மோதாமல் இருக்க மினி லாரி ஓட்டுநா் பிரேக் போட்டுள்ளாா். அச்சமயம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையின் சென்டா் மீடியனில் மோதி விபத்துக்குள்ளாகி குப்புற கவிழ்ந்தது. பைக்கில் சென்ற இருவரும் உயிா் தப்பிய நிலையில் சிறு காயத்துடன் லாரி ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தினா்.
Advertisement
மேலும், லாரி ஓட்டுநரை திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.