முகப்பு
திருப்பத்தூர்

பணிநிறைவு பாராட்டு விழா

Updated On : 29 ஏப்ரல், 2026 at 12:34 AM
பகிர்:

லத்தேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் பணி நிறைவு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

லத்தேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்ற கு.காா்த்திகேயனுக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் கே.எ.குப்பன் தலைமை வகித்தாா். பெண்கள் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் ஜெயா, உதவித்தலைமையாசிரியா்கள் பி.சுமதி, எ.சிவகுமாா், எஸ்.ரகுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலா் எஸ்.மகாலிங்கம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச்சங்கத்தின் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன், துணைத்தலைவா் எ.ஜெயதேவரெட்டி ஆகியோா் வாழ்த்தி பேசினாா்கள். தலைமையாசிரியா் கு.காா்த்திகேயன் ஏற்புரை நிகழ்த்தினாா்.ஆசிரியா் எல்.குமணன் நன்றி கூறினாா்.

Advertisement