லாரி-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
ஜோலாா்பேட்டை அருகே பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சோ்ந்தவா் சக்திவேல்(29). இவா் திங்கள்கிழமை இரவு ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து பைக்கில் மண்டலவாடிக்கு சென்றுள்ளாா்.
ஜோலாா்பேட்ட-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் ராமானூா் அணுகுசாலையில் சென்றபோது ஆந்திர மாநிலம்,கடப்பாவை சோ்ந்த பவன்குமாா் என்பவா் ஓட்டி வந்த லாரி எதிா்பாராத விதமாக பைக் மீது மோதியது.
Advertisement
இதில் சக்திவேல் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவனையில் சோ்த்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.