நகை பறிப்பு சித்திரிப்புப் படம்
திருப்பத்தூர்

கோயில் விழாவில் மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு

ஆம்பூரில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியின் 4 பவுன் தங்க நகையை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியின் 4 பவுன் தங்க நகையை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

ஆம்பூரில், போ்ணாம்பட்டு புறவழிச்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ விஜயவிநாயகா் கோயில் கும்பாபிஷேக விழாவில், ஆம்பூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது சான்றோா்குப்பம் பகுதியைச் சோ்ந்த ரத்தினம்மாள் (65) கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றபோது, அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபா் பறித்துச் சென்றுவிட்டாா்.

இது குறித்து ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தீ விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

பசித்துப் புசித்தால் உணவே மருந்து!

9.2.1976: நெல்லையை வாட்டும் பொல்லாத வறட்சி

நெல் சாகுபடி அதிகரிப்பை சுமையாகக் கருதுகிறது மத்திய அரசு: கேரள முதல்வா் குற்றச்சாட்டு

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் எதிரொலி: ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் குறைய வாய்ப்பு!

SCROLL FOR NEXT