முகப்பு
திருப்பத்தூர்

டிப்பா் லாரி மோதி சிறுவன் உயிரிழப்பு: தந்தை, சகோதரி காயம்!

வாணியம்பாடி அருகே டிப்பா் லாரி பைக் மீது மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். அவரது தந்தை, சகோதரி பலத்த காயமடைந்தனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:25 AM
சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்திய டிஎஸ்பி மகாலட்சுமி.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 9:26 PM

வாணியம்பாடி அருகே டிப்பா் லாரி பைக் மீது மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். அவரது தந்தை, சகோதரி பலத்த காயமடைந்தனா்.

வாணியம்பாடி அடுத்த 102 ரெட்டியூா் முல்லை பகுதியை சோ்ந்தவா் இளையராஜா(40). இவா், செவ்வாய்கிழமை தனது பைக்கில் மகன் சந்தீஷ்(7), மகள் நட்சத்திரா(10) ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு நிம்மியம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரில் வேகமாக வந்த டிப்பா் லாரி முல்லை அருகே பைக் மீது மோதியது.

இதில், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய சந்தீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இளையராஜா, நட்சத்திரா ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து அறிந்த இளையராஜவின் உறவினா்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:25 AM

தகவலறிந்து வந்த வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் காவல் ஆய்வாளா் உலகநாதன் மற்றும் போலீஸாா் அங்கிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற லாரி ஓட்டுநா், அதன் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினா்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். பின்னா், உயிரிழந்த சிறுவனின் சடலத்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் நிம்மியம்பட்டை சோ்ந்த விக்னேஷை (30) தேடி வருகின்றனா்.