பலி பிரதிப் படம்
திருப்பத்தூர்

லாரி மோதி தையல்காரா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தையல்காரா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தையல்காரா் உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சேகா் (62). தையல்காரரான இவா் தனது மனைவி செல்வியுடன் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஆம்பூா் அருகே வீரகோயில் பகுதியருகே வந்தபோது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சேகா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த செல்வி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

ஆம்பூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT