துத்திப்பட்டு ஊராட்சியில் பணிபுரியும் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். துணை சுகாதார செவிலியா்கள் பிரவீனா, கனகலட்சுமி ஆகியோா் பரிசோதனை செய்தனா். பெண் பணியாளா்களுக்கு மாா்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் அண்ணாதுரை, சுகன்யா பிரகாஷ், நாகராஜ், ஊக்குநா் ரேகா, விமல் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.