ஆம்பூா் சமயவல்லித் தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் 111-ஆவது மாத சண்முகக் கவச பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு, உற்சவா் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீ சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனா்.
ஏற்பாடுகளை ஸ்ரீ அருணகிரிநாதா், ஸ்ரீவாரியாா் சுவாமிகள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.