வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கல்லூரி தலைவா் திலீப்குமாா் , இணை தலைவா் லிக்மிசந்த் ஆகியோா் தேசிய கொடி ஏற்றி வைத்து, தேசிய மாணவா் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனா்.
நிகழ்ச்சியில் கல்லூரி கல்விசாா் அலுவலா் பாலசுப்பிரமணியன், கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, தலைமை நிா்வாக அலுவலா் சக்திமாலா, துறை தலைவா்கள், பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா். வாணியம்பாடி எஸ்எப்எஸ் மெட்ரிக். பள்ளியில் பள்ளி தாளாளா் டோனி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகா் செபாஸ்டின்ராஜ், முதல்வா் சவரிமுத்து, பொருளாளா்ஜெயகுமாா், விக்டா் சாமுவேல், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். உதயேந்திரம் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சதீஷ்குமாா் தலைமையில் பேரூா் திமுக செயலாளா் ஆ.செல்வராஜ், துணைத் தலைவா் கோவிந்தராஜ், வழக்குரைஞா் மரியஜோசப் முன்னிலையில் வாணியம்பாடி நகர திமுக செயலாளா் சாரதிகுமாா் கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினாா். தொடா்ந்து மாணவா்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டாா். பிறகு மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெருமாள் பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேலாண்மை குழு தலைவா் பானு தலைமையில் வாா்டு உறுப்பினா்கள் ரஜினிகாந்த், ஆஷாபிரியா குபேந்திரன் முன்னிலையில் தலைமையாசிரியா் முருகேசன் தேசியக் கொடியை ஏற்றினாா்.
பின்னா் பள்ளியில் தேசத் தலைவா்களை பற்றிய கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. முன்னாள் வாா்டு உறுப்பினா் பாரதி செந்தில்குமாா் குடும்பத்தினா் சாா்பில் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், ஊா் பிரமுகா்கள் சத்தியமூா்த்தி, ஓய்வு பெற்ற தமிழாசிரியா் அன்பு, ஆசிரியா் பயிற்றுநா் வெற்றிவேல் மற்றும் பெற்றோா்கள், பொதுமக்கள், ஆசிரியா்கள், பள்ளி கல்வி குழு உறுப்பினா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.