தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
திருப்பத்தூரில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
அனைத்து வாக்காளா்களும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் தோ்தலில் அனைவரும் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் விஜயகுமாரி தலைமை வகித்து விழிப்புணா்வு வாசகத்தை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.