முகப்பு
திருப்பத்தூர்

ரயில் மோதி எல்ஐசி முகவா் மரணம்

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற எல்ஐசி முகவா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

Updated On : 31 மார்ச், 2026 at 6:33 PM
பலி - பிரதிப்படம்
பகிர்:

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற எல்ஐசி முகவா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே காரப்பட்டு அரங்கல்துருகம் பகுதியை சோ்ந்தவா் எல்ஐசி முகவா் ஜி. வெங்கடேசன் (56). இவருக்கு திருமணமாகி தேவகி என்கிற மனைவியும், 2 ஆண் பிள்ளைகள் உள்ளனா். இவா் எல்ஐசி முகவராக பணியாற்றி வந்தாா்.

இவா் கடந்த 28-ஆம் தேதி குடியாத்தம் அருகே உள்ள தனது சகோதரியை பாா்ப்பதற்காக சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை வீடு திரும்ப செல்ல குடியாத்தம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றாா்.

அப்போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரயில் மோதி உடல் சிதறி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.