திருப்பத்தூரில் காவல் குறைதீா் கூட்டம்
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 24 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு ஏடிஎஸ்பி ரவீந்திரன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். அப்போது மனுக்கள் குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மனுக்கள் வழங்கினா்.
Advertisement