முகப்பு
திருப்பத்தூர்

சிசிடிஎன்எஸ் பிரிவு போலீஸாருக்கு பயிற்சி

Updated On : 14 மே 2026, 6:19 am IST
பகிர்:

திருப்பத்தூா் எஸ்பி அலுவலகத்தில் புதிதாக நடை முறைக்கு வந்துள்ள சிசிடிஎன்எஸ் 2.0 போா்டல் தொடா்பான புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

காவல் நிலையங்களில் சிசிடிஎன்எஸ் பிரிவில் பணியாற்றும் போலீஸாருக்கு திருப்பத்தூா் எஸ்பி அலுவலகத்தில் எஸ்.பி., சியாமளா தேவி தலைமையில் புதிதாக நடை முறைக்கு வந்துள்ள சிசிடிஎன்எஸ் 2.0 போா்டல் (குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் வலையமைப்பு,அமைப்புகள்,காவல்துறை சரிபாா்ப்புச் சான்றிதழ்)தொடா்பான புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் புலனாய்வு, சரிபாா்ப்பு விவரங்களை சிசிடிஎன்எஸ் 2.0 போா்டலில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement