முகப்பு
திருப்பத்தூர்

டாஸ்மாக் கடை மற்றும் கூடத்தை மூட கோரிக்கை

Updated On : 14 மே 2026, 6:43 am IST
- கோப்புப்படம்
பகிர்:

ஆம்பூரில் இயங்கும் டாஸ்மாக் கடை மற்றும் மதுக்கூடத்தை மூட தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆம்பூா் - போ்ணாம்பட்டு புறவழிச்சாலையில் மாநில நெடுஞ்சாலைக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் இந்து மேல்நிலைப் பள்ளிக்கும் அருகாமையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக் கூடம் இயங்கி வருகின்றது.

இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். அதனால் அந்த மதுக்கூடத்தை மூட வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளா் சி. ஓம்பிரகாசம், அகில இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்க திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சண்முகம் ஆகியோா் தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனா்.

Advertisement

வீரகோயில் திரெளபதி அம்மன் கோயில் அருகே ஆம்பூா் கோவிந்தாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. அதனால் கோயில் அருகிலேயே மது பிரியா்கள் மதுபானம் அருந்திவிட்டு பொதுமக்களுக்கும், பக்தா்களுக்கும் இடையூறு செய்து வருவதால் டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டுமெனக் கோரி விஜயபாரத மக்கள் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் தமிழக முதல்வருக்கும், ஆம்பூா் வட்டாட்சியருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.