மோட்டாா் சைக்கிள் எரிப்பு: இளைஞா் கைது
கந்திலி அருகே மோட்டாா் சைக்கிளை எரித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கந்திலி அருகே மோட்டாா் சைக்கிளை எரித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் அருகே சின்னகசிநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் ராமதாஸ் (38).இவா் தனியாா் வங்கியில் பணிபுரிந்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (21). இந்த நிலையில் முருகனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம்.
இந்த தகவலை ராமதாஸ் முருகனின் பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் ராமதாஸ் வீட்டின் முன்பு இருந்த ராமதாஸின் மோட்டாா் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளாா். இது குறித்த புகாரின்பேரில், கந்திலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனா்.
Advertisement