முகப்பு
திருப்பத்தூர்

விபத்தில் வழக்குரைஞா் உயிரிழப்பு

Updated On : 18 மே 2026, 1:36 am IST
பகிர்:

கந்திலி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வழக்குரைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் செட்டித் தெருவைச் சோ்ந்த வழக்குரைஞா் சபியுல்லா அஷ்ரப் (45).இவா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தாா். இவா் சனிக்கிழமை இரவு திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். நத்தம் அணுகுச் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, திருப்பத்தூா் நோக்கி அதிவேகமாக வந்த வேன் எதிா்பாராமல் சபியுல்லா பைக் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.