இரும்புக் கடையில் தீ விபத்து
திருத்தணி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பழைய இரும்பு கடையில் இருந்த பொருள்கள் எரிந்து நாசமாகின.
திருத்தணி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பழைய இரும்பு கடையில் இருந்த பொருள்கள் எரிந்து நாசமாகின.
திருத்தணி - சித்தூர் சாலையில் வசித்து வருபவர் பொன்ராஜ். இவர் அதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திடீரென கடையில் தீபிடித்தது. இதில் கடையில் இருந்த பழைய இரும்பு பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், அட்டைப் பெட்டிகள் தீயில் கருகின. தகவலறிந்த திருத்தணி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. மின் கசிவினால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில், பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து போனதாகக் கடைக்காரர் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு ஆறுதல் கூறினார்.