முகப்பு
திருவள்ளூர்

மர்மக் காய்ச்சல்:பள்ளி மாணவர் சாவு

கும்மிடிப்பூண்டி அருகே மர்மக் காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவர் வியாழக்கிழமை இறந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அருகே மர்மக் காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவர் வியாழக்கிழமை இறந்தார்.
பெரியபாளையத்தை அடுத்த ஆரணி அருகே மங்களம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜின் மகன் தியாகராஜன் (16). இவர், ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கடந்த சில நாள்களாக தியாகராஜன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை. 
இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட தியாகராஜன் வியாழக்கிழமை இறந்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →