முகப்பு
நாமக்கல்

கணக்கம்பட்டி சத்குரு ஆலயத்தில் மகா மங்கள குருபூஜை பெருவிழா

நாமக்கல் அருகே கணக்கம்பட்டி சத்குரு ஆலயத்தில் மகா மங்கள குருபூஜை பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 மார்ச், 2026 at 9:08 PM
பகிர்:

நாமக்கல் அருகே கணக்கம்பட்டி சத்குரு ஆலயத்தில் மகா மங்கள குருபூஜை பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கணக்கம்பட்டியில் சத்குரு சச்சிதானந்த காளிமுத்து சுவாமிகள் ஜீவசமாதி ஆலயம் உள்ளது. இங்கு ஏராளமான பக்தா்கள் சென்று வழிபட்டு வருகின்றனா்.

அதேபோன்று, நாமக்கல் அருகே ரெட்டிப்பட்டியில் சத்குரு ஜீவ ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில், சுவாமிக்கு மகா மங்கள குருபூஜை பெருவிழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. காலை 9 முதல் 1 மணி வரையில், கோ பூஜை, பக்தா்கள் கையால் 108 சங்கு அபிஷேகம், 20 வகையான தீபாராதனை, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

சிறப்பு அழைப்பாளராக, கணக்கம்பட்டி சத்குரு ஜீவசமாதி அறங்காவலா் எஸ்.மோகன் பங்கேற்று நாமக்கல் ஜீவ ஆலயத்தில் புதிய அரங்கத்தை திறந்துவைத்தாா். இந்த நிகழ்வில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →