திருவள்ளூர்

காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண்: பிளஸ்-1 மாணவி தற்கொலை

DIN

காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அம்பத்தூர் மேனாம்பேடு முனுசாமி தெருவில் வசிப்பவர் சங்கரன். இவரது மகள் இந்துமதி (16). அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராசர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். 
இந்நிலையில், பள்ளியில் நடைபெற்ற காலாண்டு தேர்வில் கணிதப் பாடத்தில் இந்துமதி, குறைந்த மதிப்பெண் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், செவ்வாய்க்கிழமை பெற்றோர் வேலைக்கு சென்றவுடன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்த புகாரின்பேரில், அம்பத்தூர் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT