முகப்பு
திருவள்ளூர்

தூய்மை பாரத விழிப்புணர்வுப் பேரணி

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை மற்றும் மேல்முதலம்பேடு ஆகிய பகுதிகளில் தூய்மை பாரத நாளையொட்டி, சுகாதாரப் பேரணி மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Updated On : 19 ஏப்ரல் 2018, 4:15 am IST
பகிர்:

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை மற்றும் மேல்முதலம்பேடு ஆகிய பகுதிகளில் தூய்மை பாரத நாளையொட்டி, சுகாதாரப் பேரணி மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் தயாநிதி மேற்பார்வையில் சுகாரதப் பணிகள் நடைபெற்றன. கீழ்முதலம்பேடு ஊராட்சிக்கு உள்பட்ட கவரப்பேட்டையில் ஊராட்சி செயலாளர் சாமுவேல் தலைமையில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
இதில், திறந்த வெளியில் குப்பை கொட்டக் கூடாது, திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. 
இதேபோல், மேல்முதலம்பேடு ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் மாரிமுத்து தலைமையில் தூய்மை பாரத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.