கிருஷ்ண ஜயந்தி விழா
திருவள்ளூரில் உள்ள ஸ்ரீநிகேதன் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து உறியடித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
திருவள்ளூரில் உள்ள ஸ்ரீநிகேதன் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து உறியடித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியின் சார்பில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு அப்பள்ளியின் தாளாளர் விஷ்ணுசரண் தலைமை வகித்தார். பள்ளியின் இயக்குநர் பரணிதரன் முன்னிலை வகித்தார்.
விழாவையொட்டி மழலையர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணர், ராதை போல் வேடமணிந்து வந்து நாடகம் நடத்தியும், நடனம் ஆடியும் மகிழ்வித்தனர். அதைத் தொடர்ந்து கீதாசார பாடல்களைப்பாடினர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக வெண்ணெய் பானையை உறியடிக்கும் நிகழ்ச்சியில் மழலையர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் கவிதா கந்தசாமி, தலைமை ஆசிரியர் பத்மாவதி, பள்ளி ஆசிரியர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.