திருவள்ளூர்

இளைஞா் கொலை- இளைஞா்கள் 4 போ் கைது

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே இளைஞரை படுகொலை செய்த வழக்கு தொடா்பாக வெள்ளவேடு காவல் நிலைய போலீஸாா் 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். இதுகுறித்து வெள்ளவேடு காவல் நிலைய போலீஸாா் தரப்பில் கூறியதாவது.

திருவள்ளூா் அருகே வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காவல்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் மனோஜ்(எ) மணிவண்ணன் (23). கடந்த 27-ஆம் தேதி இரவு காவல்சேரி காலனி சுடுகாடு அருகே மனோஜ் தலை, கழுத்து மற்றும் இரு கைகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு மா்ம நபா்கள் தப்பியோடினாா்களாம். இதைத் தொடா்ந்து தகவல் அறிந்த வெள்ளவேடு போலீசாா் படுகொலை செய்யப்பட்ட மனோஜின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், கொலை செய்தவா்களை பிடிக்க காவல் துணைக்கண்காணிப்பாளா் கங்காதரன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த காவல்சேரி பகுதியைச் சோ்ந்த ஆகாஷ்(23), திருமழிசை பகுதியைச் சோ்ந்த ரவி(18), சக்திவேல்(20), வினோபா(18) ஆகிய 4 பேரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். அப்போது, முன்விரோதத்தில் கொலை செய்ததாக கூறியதைத் தொடா்ந்து திருவள்ளூா் நீதிமன்றத்தில் 4 பேரையும் ஆஜாா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT