திருவள்ளூர்

பள்ளி மாணவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

DIN


கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே பன்பாக்கம் பகுதியில் பள்ளி மாணவர் மின்சார ரயிலில்   பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கவரப்பேட்டை அருகே உள்ள தர்காசிகண்டிகை பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ஏழுமலையின் மகன் முகேஷ்குமார்(14). அவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், முகேஷ்குமார் செவ்வாய்க்கிழமை காலை பன்பாக்கம் பகுதியில் சென்னையில் இருந்து  கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த மின்சார ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார், தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
இந்த தற்கொலை குறித்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து,  பள்ளி மாணவர் முகேஷ்குமார் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்னையா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT