திருவள்ளூர்

தீக்குளித்த பெண் சாவு

தினமணி

மாதவரம் அருகே தீக்குளித்த பெண் உயிரிழந்தார்.
 சென்னை மாதவரத்தை அடுத்த பால்பண்ணை பெரியமாத்தூர் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஜெகன். அவருடைய மனைவி சுஜாதா (39). அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. சுஜாதாவுக்கும், ஜெகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
 இந்நிலையில், இருவருக்கும் இடையே சனிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சுஜாதா உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். பலத்த காயமடைந்த அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, மாதவரம் பால்பண்ணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT