திருவள்ளூர்

காணும் பொங்கல் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

DIN

மாநெல்லூர் பகுதியில் காணும் பொங்கலையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டியை அடுத்த மாநெல்லூரில் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கோலப் போட்டி, ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்களுக்குத் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.  விழாவில், பா.செ.குணசேகரன் தலைமை வகித்து, போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் சந்திரமோகன், வடிவேல், சீனு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT