மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என அம்பேத்கர் மக்கள் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அம்பேத்கர் மக்கள் கட்சியின் தலைவர் மத்தியாஸ், பொதுச் செயலாளர் எ.சக்கரபாணி, பொருளாளர் ஸ்டெல்லா மேரி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மத்திய அரசின் உதவிகளைப் பெறும் நோக்கத்தில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளதை வரவேற்கிறோம். மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரிப்பது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.