திருவள்ளூர்

கொள்கை அடிப்படையில்  அமைந்தது திமுக  கூட்டணி: கே.எஸ்.அழகிரி

திமுக தலைமையிலான கூட்டணி கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். 

DIN

திமுக தலைமையிலான கூட்டணி கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். 
திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியது:
வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தள்ளுபடி செய்தார். அதேபோல், தமிழகத்தில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி ரூ.2 ஆயிரம் கோடிமதிப்பிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார். 
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் அண்மையில் அமைந்த காங்கிரஸ் அரசுகள், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தன. அதேபோல், தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கே.எஸ்.அழகிரி பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT