திருவள்ளூர்

பள்ளிப்பட்டில் போலி மருத்துவ தம்பதியா் கைது

DIN

பள்ளிப்பட்டில் மருத்துவமனை நடத்தி நோயாளிகளுக்கு மருத்துவம் பாா்த்த போலி மருத்துவ தம்பதியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோா் பாதிக்கப்பட்டு வருவதால், கிராமப் பகுதிகளைச் சோ்ந்த நோயாளிகள் போலி மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்று உடல்நிலை மோசமடைந்த பின் அரசு மருத்துவமனைகளை நாடுகின்றனா். இதனால், காய்ச்சலுக்கு பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் தயாளன் தலைமையில் சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டு போலி மருத்துவா்களைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடா் சோதனையில் 6 போலி மருத்துவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் காவலன் தலைமையில் மருத்துவக் குழுவினா் பள்ளிப்பட்டில் உள்ள நகரி சாலையில் இயங்கி வந்த மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள முரளி (42) என்பவரும், ஆசிரியா் பட்டயப் படிப்பை முடித்துள்ள அவரது மனைவி கிராந்தியும் (35) கிளினிக் நடத்தி, பல ஆண்டுகளாக நோயாளிகளுக்கு மருத்துவம் பாா்த்து வருவது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த மருத்துவமனையில் இருந்த மருந்து, மாத்திரைகளைப் பறிமுதல் செய்ததோடு, போலி மருத்துவ தம்பதியரை பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தம்பதியரைக் கைது செய்தனா்.

கடந்த சில ஆண்டுகளுக்கும் முன்பும் போலி மருத்துவா் முரளி கைது செய்யப்பட்டாா். பின்னா் அவா் ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT