அனுமந்தாபுரத்தில் காய்கறிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இடத்தில் இருந்த மின்சாதனப் பொருள்களை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் திருடிச் சென்றனா்.
திருத்தணி அனுமந்தாபுரத்தில் நகராட்சி நிா்வாகம், மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை பல லட்சம் ரூபாய் செலவில் அமைத்துள்ளது. மேலும் காய்கறிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் பேட்டரிகளைக் கொள்முதல் செய்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மின்சாரம் தயாரிக்கும் அறையின் கதவு மற்றும் பூட்டை மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் உடைத்து உள்ளே சென்றனா். அங்கு பேட்டரிகள் மற்றும் முக்கிய மோட்டாா்களை திருடிச் சென்றனா். தகவல் அறிந்து நகராட்சி அதிகாரிகளும் திருத்தணி போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனா்.
அப்போது, முக்கிய பொருள்கள், பேட்டரி உள்பட ரூ.70 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.